லண்டனில் 42 ஆண்டுகளுக்கு முன். திருடப்பட்ட சாமி சிலைகள். கண்டுபிடிப்பு..!!!

லண்டனில் 42 ஆண்டுகளுக்கு முன். திருடப்பட்ட சாமி சிலைகள். கண்டுபிடிப்பு..!!!

மிழக கோயிலில் இருந்து திருடப்பட்டு இலண்டனில் உள்ள ராமர்,லக்ஷ்மணர் சீதாபிராட்டி ஆகிய மூன்று வெண்கல சிலைகளை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். சிலைகள் மீட்பு பணி குழு என்ற அமைப்பை நடத்திவரும் இவர் தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க போலீசாருக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் லண்டனில் உள்ள டீலர் ஒருவர் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் சிலைகளின் படங்களை வெளியிட்டார். அதில் தமிழக கோவிலில் திருடப்பட்ட சிலைகள் இருப்பதை விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் கண்டறிந்தனர்இதுகுறித்து உடனடியாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தீவிர ஆய்வு மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த சிலைகள் மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலம் என்ற ஊரில் உள்ள கோயிலில் இருந்து 1978ம் ஆண்டு திருடப்பட்ட ராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதை பிராட்டி வெண்கல சிலைகள் என்பதை உறுதிசெய்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களையும் பிரிட்டன் அரசுக்கு அனுப்பினர்.

இதனிடையே சிலைகள் படங்களை வெளியிட்டு விற்பனைக்கு என குறிப்பிட்டு இருந்த அந்த டீலரும் , 3 சிலைகளையும் லண்டன் அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளார். தமிழக கோயிலில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ராமர், லக்ஷ்மணன், சீதாபிராட்டி ஆகிய மூன்று வெண்கல சிலைகளை தமிழகத்திற்கு எடுத்துவர இந் கோயிலில் இருந்து திருடப்படும்திய தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்