நாடுமுழுவதும் நடைபெறும் மக்களவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பா.ஜ., கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார் மோடி.
இதற்கு பல்வேறு நாட்டின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், பிரதமர் மோடிக்கு ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டன் பிரதமர் தெரசா மே வாழ்த்து தெரிவித்துள்ளனர்.