ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் வர்ணனையாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் 2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பரித்தொகை உள்ளிட்டவைகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில், தற்போது 24 வர்ணனையாளர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியை ரசிக்கர்களிடையே கொண்டு செல்வதில் முக்கிய பங்குவகிப்பவர் வர்ணையாளர் மட்டுமே.
போட்டியின்போது, விக்கெட் விழுந்தாலோ, பந்துகளை வீணடித்தாலோ அல்லது ஷாட்டுகளை தவறாக அடித்தாலோ இவர்கள் வீரர்களுக்கு தெரிவிக்கும் அறிவுரைகள் பார்வையாளர்களை கவரக்கூடியதாக இருக்கும்.
இந்த போட்டியில் வர்ணனையாளராக இந்தியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி தேர்வாகியுள்ளார்.