டிராவிட்டுக்கு நோட்டீஸ்; கங்குலி அதிருப்தி

  • In Sports
  • August 7, 2019
  • 230 Views
டிராவிட்டுக்கு நோட்டீஸ்; கங்குலி அதிருப்தி

புதுடெல்லி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட்டுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியதற்கு கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய அகாடமி தலைவருமான ராகுல் டிராவிட்டுக்கு, மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் சஞ்சய் குப்பதா வலியுறுத்தலின் பேரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய நெறியமுறை அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் நோட்டீசில், ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வைஸ் பிரசிடண்ட்டாகவும் பதவி வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், பதிலளிக்க கால அவகாசம் வழங்கியள்ளதாகவும் முன்னாள் நீதிபதி ஜெயின் தெரிவித்துள்ளார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள கங்குலி, இந்திய கிரிக்கெட்டில் தற்போது புதிய பேஷன் இருப்பதாகவும், இரட்டை ஆதாயம் தரும் பதவி செய்திகளில் தொடர்ந்து நிலைத்திருக்க சிறந்த வழி கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டிற்கு உதவ வேண்டும் டிராவிட்டுக்கு இரட்டை ஆதயம் தரும் பதவி வகித்ததற்காக பிசிசிஐ-ன் நெறிமுறை அதிகாரியால் நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்