போலந்து:
காந்தி ஜெயந்தியையொட்டி போலந்து நாட்டின் அஞ்சல் துறை தபால் தலை வெளியிட்டு கவுரப்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும், ரூ.150 நாணயத்தை வெளியிட்டு இந்திய அரசு கவுரப்படுத்தியது.
இந்நிலையில், மகாத்மா காந்தியை கவுரவிக்கும் வகையில் போலந்து நாட்டின் அஞ்சல் துறையான போக்ஸ்டா போல்ஸ்கா நிறுவனம், தபால் தலையை வெளியிட்டுள்ளது என போலந்து இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.