புதுடெல்லி:
காந்தி ஜெயந்தியையொட்டி மகாத்மா காந்திக்கு ஏர் இந்தியா அஞ்சலி செலுத்தும் வகையில் விமானத்தில் அவரது படத்தை வரைந்துள்ளது.
காந்தி ஜெயந்தி நாடுமுழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதுடெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதயில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை வரைந்து தனது அஞ்சலியை செலுத்தியது.