சென்னை:
மகாத்மா காந்தி விரும்பிய இந்தியாவை உருவாக்க உழைப்போம் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள செய்தியில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150வது நாளில் அகிம்சை நாயகனையும், அவருடன் இணைந்து இந்தியாவின் விடுதலைக்காக உழைத்த லட்சக்கணக்கான தூய உள்ளங்களையும் போற்றுவோம். அவர்கள் காண விரும்பிய இந்தியாவை உருவாக்க உழைப்போம்.
மகாத்மாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் பா.ம.க.வினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும். காலநிலை நெருக்கடி நிலை பிரகடனம் கோரி தீர்மானங்கள் நிறைவேற்ற மக்களுடன் இணைந்து அதிகாரிகளிடம் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.