மழை நிற்க தவளைகள் விவாகரத்து

மழை நிற்க தவளைகள் விவாகரத்து

போபால்:

மத்திய பிரதேசத்தில் மழை நிற்பதற்காக தவளைகளுக்கு செய்து வைத்த திருமணத்தை விவாகரத்து செய்துவைக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டில் பல்வேறு கிராமங்களில் மழை வேண்டி பல்வேறு சடங்குகளும் பூஜைகளும் நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியில் மழை வேண்டி இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்த்ததைவிட அதிகமான மழை பொய்துவிட்டது என்றும், இன்னும் மழை நிற்காமல் பெய்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதனாலும், தவளைகளுக்கு செய்து வைத்த திருமணத்தை விவகாரத்து செய்யும் விநோத நிகழ்வு நடத்திவைக்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்