ஒசூர்:
ஒசூர் வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் பள்ளி,கல்லூரி ஓட்டுநர்,நடத்துநர் வாகன ஓட்டிகள், ஓட்டுநர் உரிமம் விண்ணபிக்க வந்தோர் என அனைவருக்குமா மருத்துவ பரிசோதனையை ஒசூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கு அவர்கள் தொடக்கி வைத்தார்.
பின்னர் வாகன ஓட்டிகளிடம் பேசிய சங்கு:
எமதர்மன் உள்ளிட்ட தெய்வங்களே தங்களை பாதுகாத்து கொள்வதற்காக தலையில் கிரீடம் வைத்திருந்தனர், மனிதர்களாகிய நாம் தலைகவசத்தை நமத்து பாதுகாப்பிற்காக கட்டாயம் அணிந்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
ஓசூர் ஆர்டிஓ ஈஸ்வரமூர்த்தி பேசுகையில்: ஒசூர் வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் மூன்று நாட்கள் இலவச மருத்துவமுகாம்களை நடத்துவதாகவும் முதல் முகாம் ஒசூரில் நடத்தப்பட்டிருப்பதாக பேசினார்.
மருத்துவ முகாமில் பங்கேற்ற அனைவரையும் பரிசோதித்து, உடல் ஆரோக்கியம் காக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.