ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்க டோக்கன் கொடுக்கப்படும் !!

ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்க டோக்கன் கொடுக்கப்படும் !!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி தவிர பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்க அறிவிப்பு வெளியிட்டது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டபோது, இலவச முக கவசங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்கப்படும்.இதற்கான டோக்டன்கள் ஆகஸ்ட் 1முதல் 3ஆம் தேதி வரை கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

தமிழக முதல்வரின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 73.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சென்னையில் தீவிர தடுப்பு நடவடிக்கையால் மட்டும் 83 சதவிகிதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்