இன்றைக்குள் மாணவர்களுக்கு லேப்டாப்

  • In Chennai
  • December 16, 2019
  • 181 Views
இன்றைக்குள் மாணவர்களுக்கு லேப்டாப்

சென்னை:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டாக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாத நிலையில், இன்றைக்குள் அனைவருக்கும் லேப்டாப் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உள்ள 11 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளாக லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து ‘போனா¬பைடு’ எனப்படும் படிப்பதற்கான உறுதிச் சான்றிதழைப் பெற்று, இன்றுக்குள் லேப்டாப் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக லேப்டாப்கள் தேவைப்பட்டால் தேவைப்பட்டிலைப் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு டிசம்பர் 17ம் தேதிக்குள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்