அரசுப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கொடுத்த இலவச பேருந்துகள்..!

அரசுப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கொடுத்த இலவச பேருந்துகள்..!

பாசூர்:

ஈரோடு அருகே உள்ள அரசுப்பள்ளிக்கு தற்போதைய மாணவர்களுக்காக முன்னாள் மாணவர்கள் இலவசமாக 2 பேருந்துகளை வழங்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பாசூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுற்றுவட்டார பகுதியிலிருந்து நீண்ட தூர பயணமாக வந்து செல்கின்றனர்.

இதனைக்கருத்தில் கொண்டு, அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்களுடைய பள்ளியில் பயிலும் மாணவர்கள் வந்து செல்லும் வகையில் 2 புதிய இலவச பேருந்துகளை வழங்கியுள்ளனர்.

முன்னாள் மாணவர்களின் இந்த செயலை அப்பகுதியினரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

இதனை பாராட்டும் வகையில், தமிழக அரசுப்பள்ளிகளில் நடைபயணமாக தவிக்கும் மாணவர்களுக்கும் இதேபோல் முன்னாள் மாணவர்கள் இலவச பேருந்துகளை வழங்கலாமே…

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்