அரவக்குறிச்சியில் 63 வேட்பாளர்கள்; 4 ஓட்டு இயந்திரங்கள்..!

அரவக்குறிச்சியில் 63 வேட்பாளர்கள்; 4 ஓட்டு இயந்திரங்கள்..!

சென்னை:

அரவக்குறிசசி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் 4 ஓட்டுப்பதிவு இயங்கிரங்களை வைக்கபடவுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் (19ம் தேதி) அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அறவக்குறிச்சியில் 63 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே அங்கு 4 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன.

அரவக்குறச்சியில் 250 வாக்குச்சாவடிகள், திருப்பரங்குன்றத்தில் 297, சூலூர் 329, ஒட்டப்பிடாரத்தில் 291 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 1300 துணை ராணுவப்படையினரும், 15,399 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்