கொழும்பு:
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு த்துறை செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கை பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, கொழும்பு குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.