சென்னை:
சென்னை மாநகரம் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பணிகளில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவும், நடைபாதை வியாபாரிகள் கணக்கெடுப்பு குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்¬னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.