பிராங்க்பர்ட்:
ஒரு கப் காபிக்காக 326 பேருடன் விமானம் தரையிறங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்டிலிருந்து மெக்சிகோவின் கேன்கன் நகருக்கு ஏர்பஸ் ஏ330 ரக விமானம், 326 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது விமானி அறையில் வைக்கப்பட்டிருந்த சூடான காபி சிந்தியதால் அங்கிருந்த பேனல் பகுதியில் விழுந்ததால் ஆடியோ செயலிழந்தது. மின்சாதனப் பொருட்கள் கருகும் வாடையும் வந்தது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பைலட் உடனடியாக விமானத்தை அயர்லாந்தில் பத்திரமாக தரையிறக்கினார். 326 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.
இச்சம்பவம் குறித்து விமான விபத்துப் புலனாய்வு பிரிவு விசாரணையை நடத்தி வரும் நிலையில், உள்நாட்டு வான்போக்குவரத்து சட்டப்படி 10,000 முதல் 80,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.