புதுடெல்லி:
மக்களவைத்தேர்தல் முடிவு வெளியாவதற்கு 5 மணி நேரம் தாமதமாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.
இதனால், மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.