கடலில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.1 லட்சம்

கடலில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.1 லட்சம்

சென்னை:

கடலில் மீன்பிடிக்கும்போது உயிரிழந்த 7 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த செல்வமணி மற்றும் கோவிந்தராஜ் என்பவரும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாஸ் மற்றும் மினோன் என்பவரும் மீன்பிடிக்கம்போது கடலில் தவறிவிழுந்து உயிரிழந்தனர்.

மேலும், கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த லார்துராஜ், சகாயம், மற்றும் அருளிஸ் ஆகியோர் படகு விபத்தில் உயிரிழந்தனர்.

இவர்கள் 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்