அதிராம்பட்டினம்:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் கடந்த 11 நாட்களாக சூறைக்காற்று கடலில் வீசியது.
இதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் கடும் வேகத்துடன் கூடிய சூறைக்காற்றை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் படகு கடலுக்குள் கவிழ்ந்து விடும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் வேறு வழியின்றி மீன்பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்பினர்.
இதே நிலை தொடர்ந்து 11 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு காற்றின் வேகம் குறைந்து காணப்பட்டதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிட்டு இன்று காலையில் கரை திரும்பினர்.