லக்னோ:
நாட்டின் முதல் தனியார் ரயில் சேவையை உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யாநாத் இன்று துவக்கிவைத்தார்.
இந்த ரயில் லக்னோ – புதுடெல்லி இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.
இந்த தனியார் ரயில் சேவை நாளை முதல் வழக்கமாக டெல்லியிருந்து இயக்கப்படவுள்ளது. மறுமார்கமாக லக்னோவில் இருந்து நாளை மறுநாள் முதல் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் கான்பூர், காசியாபாத் ரயில்நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் எனவும், லக்னோவிலிருந்து டெல்லிக்கு 6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடையும்.