அமெரிக்கா:
அமெரிக்காவில் முதல் அப்பாச்சி போர் தாக்குதல் ஹெலிகாப்டரை, இந்திய விமானப்படை பெற்றுக்கொண்டது.
இந்திய விமானப்படையை வலு சேர்க்கும் வகையில், அதி நவீன ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவுசெய்தது. இதனையடுத்து, 22 ‘அப்பாச்சி’ ரக போர் ஹெலிகாப்டர்களை வாங்க, அமெரிக்காவிடம் இந்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதனையடுத்து, அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஹெலிகாப்டர் உற்பத்தி தளத்தில், முதல் ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டரை இந்திய விமானப்படை பெற்றுக்கொண்டது.