சென்னை:
சென்னை பாரிமுனையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அதிகாலை 5 மணியளவில் தரை தளத்தில் வயர்கள் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து தகவலின்பேரில் 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீ விபத்தில் சர்வர்கள் சேதமடைந்துள்ளதால் பூக்கடை, துறைமுகம், திருவொற்றியூர் பகுதிகளில் தகவல் சேவை பாதிக்கப்படும் என பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.