கொச்சி:
கொச்சியில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீட்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
கேரள மாநிலம், கொச்சியில் உள்ள ஸ்ரீசாந்தின் வீட்டில், நேற்று இரவு 2 மணியளவில் கீழ் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து தீயை அணைத்தனர்.
சீலிங் ஃபேனில் ஏற்பட்ட மின் கசிவினால் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தின்போது ஸ்ரீசாந்தின் மனைவி மற்றும் குழந்தைகள் முதல் தளத்தில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மும்பைக்கு சென்றிருந்த ஸ்ரீசாந்த் கொச்சி வருகைக்காக அவரது குடும்பம் காத்துக்கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.