சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த சிங்கம்புணரியில், ஒரு தனியார் பஞ்சு ஆலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில், இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீவிபத்தில், சுமார் ரூ.10 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.