நொய்டா:
இந்து கடவுள்களை அவமதித்த அமேசான் மீது நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஆன்லைன் விற்பனை கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்து கடவுள்கள் சிவன், விநாயகர் படங்கள் வரையப்பட்ட டாய்டெல் பேப்பர், கால்மிதி ஆகியவற்றை அமெரிக்க இணையபக்கத்தில் விற்பனை செய்தது.
இது இந்து மக்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
#BoycottAmazon
என ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர்.
இந்நிலையில், விகாஷ் மிஷ்ரா என்பவரின் புகாரின் பேரில், தற்போது நொய்டா போலீசார் அமேசான நிறுவனத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.