மாணவர் சங்கத்தலைவர் மீது வழக்கு

மாணவர் சங்கத்தலைவர் மீது வழக்கு

புதுடெல்லி:

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர் சங்க தலைவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் சிலர் மாணவர்களை இரும்பு ராடால் அடித்து நொறுக்கியதாகவும், இதில் மாணவர் சங்க தலைவர் ஆயிஷ் கோஷ் உள்ளிட்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உள்ளிட்ட 19 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் கடந்த 4ம் தேதி பல்கலைக்கழக காவலர்களை தாக்கி சர்வர் அறையை உடைத்து சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்