மின்சாரம் தாக்கி உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம்

  • In Chennai
  • September 19, 2019
  • 199 Views
மின்சாரம் தாக்கி உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம்

சென்னை:

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் தீனா மற்றும் சிட்டலபாக்கம் சேதுராஜன் குடும்ங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த சிறுவன் தீனா மற்றும் தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் சேதுராஜ் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இந்த இரண்டு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்களையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தீனா மற்றும் சேதுராஜன் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிடுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்