”சிறை நிரப்பும் போராட்டம்” – மு.க.ஸ்டாலின்

”சிறை நிரப்பும் போராட்டம்” – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்காவிடில் விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் உள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வேலை வாய்ப்பு பறிபோயுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் இல்லாமல் பெரும்பாலானவைகள் மூடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்