ஆற்றில் மூழ்கி சிறுவன்; தந்தையுடன் பலியான சோகம்

ஆற்றில் மூழ்கி சிறுவன்; தந்தையுடன் பலியான சோகம்

சூளகிரி:

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றச் சென்ற தந்தையும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த, உலகம் தரப்பு ராமாபுரம் கிராமம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்திற்கு கீழே கைகழுவச் சென்ற சிறுவன் திடீரென ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார். சிறுவனை காப்பாற்ற உடனடியாக ஆற்றில் குதித்த தந்தையும் ஆற்றில் அடித்துச்செல்லப்படார்.

தகவலறிந்து விரைந்த ராயக்கோட்டை தீயணைப்பு மீட்டுப்படையினர், பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விசாரணையில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் அத்தாணி கிராமத்தை சேர்ந்த பாலாஜி (36) மற்றும் அவரது மகன் முகில் என்பது தெரியவந்துள்ளது.

சூளகிரி அருகே கோபசந்திரத்தில் நேற்று
தென்பெண்ணை ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் குருமூர்த்தி ஆற்றில் அடித்து
செல்லப்பட்டு பலியானார். அவரது உடல் இன்னும் கிடைக்கவில்லை.

நாகரசம்பட்டி அருகே தளிஹள்ளியில் சவுளூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம்
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை
பலியானார். அவர் யார் என தெரியவில்லை.

கடந்த 24ம் தேதி செவ்வாய் கிழமை முதல், இந்த மாதம் 1ந் தேதி வரை 8
நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரி, குட்டைகளில் மூழ்கி 11 மாணவ,
மாணவிகள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்