புதுடெல்லி:
நாடு முழுவதும் டிசம்பர் 1ம் தேதி முதல் ‘பாஸ்டேக்’ கார்டுகளை பயன்படுத்தி மட்டுமே சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த முடியும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை 40 சதவீத வாகன உரி¬மையாளர்கள் ‘பாஸ்டேக்’ கார்டுகளை பெற்றுள்ளனர். மீதமுள்ள வாகன உரிமையாளர்கள் வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் கார்டுகளை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கார்டுகளை பெற ஐசிஐசிஐ, ஆக்சிஸ், எச்டிஎப்சி மற்றும் கோடாக் வங்கிகள் எந்தவித கட்டணமும் வாங்கக்கூடாது என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.