அமோக விளைச்சல்; விவசாயிகள் மகிழ்ச்சி

அமோக விளைச்சல்; விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூர்:

5 ஆண்டுகளுக்கு பிறகு ராகி அமோக விளைச்சலால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ராகி, அமோகமாக விளைந்து அறுவடைக்கு தயாராகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஓசூர்,சூளகிரி,கெலமங்கலம்,தளி ஆகிய ஒன்றியங்களில் 40 ஆயிரம் ஹெக்டேர்களில் ராகி பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு போதிய மழையின்றி விளைச்சல் குறைந்து, விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு சரியான சமயத்தில் நல்லமழை பெய்து, வயலில் ஈரப்பதம் நிலவியதால் ராகி கதிர்கள் நன்கு விளைந்து அமோக விளைச்சரலாக காணப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதுப்போன்று விளைச்சல் இருந்ததாகவும், தொடர்ந்து 5 ஆண்டுகளாக ராகி விளைச்சல் குறைந்திருந்த நிலையில், இந்தாண்டு ராகி விளைச்சலை பார்க்கும் விசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்