விதை, உரம் மருந்து கடை திறப்பு

விதை, உரம் மருந்து கடை திறப்பு

தருமபுரி:
தர்மபுரியில் விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சிகொல்லி மருந்துகடை பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பூமாலை வணிக வளாகத்தில் இன்று புவனேஸ்வரி (ஏடிஏ) வேளாண்மைதுறை அதிகாரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மணிராஜன் (ஏஓ) வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனை துறை தருமபுரி, சுதா வேளாண்மை துறை, அமுதவள்ளி வேளாண்மைதுறை மற்றும் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், கோபி வேளாண்மை விற்பனை துறை உழவர் சந்தை ஆகியோர்கள் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு தேவையான அனைத்து விதைகள், உரம், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்கும்.

இந்த கடையை அரசு அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து வருவார்கள். விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவதற்கு இந்த கடையை திறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்