கோலிக்காக குதித்த ‘பிக் பேன்’

  • In Sports
  • November 16, 2019
  • 217 Views
கோலிக்காக குதித்த ‘பிக் பேன்’

இண்டூர்:

கோலியை பார்க்க மைதானத்துக்குள் குதித்து, அவருடன் நடந்த தீவிர ரசிகர் ஒருவரால் பரபரப்பை ஏற்படுத்தியது.

பங்களாதேஷ் அணியுடன் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இண்டூரில் உள்ள ஹல்கார் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த கோலியின் தீவிர ரசிகரான சுராஜ் பிஸ்ட் கலந்துகொண்டார். 22 வயதான இவர் இண்டூரில் சமையல் வேலை செய்பவர்.

இண்டூரின் ஹல்கார் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற்றபோது, கோலியை பார்க்கும் ஆர்வத்தில், மைதானத்திற்குள் சுரஜ் குதித்துள்ளார். பின்னர் கோலியுடன் நெருங்கியவாறு அனைத்து நடந்து சென்றார். உடனடியாக பாதுகாப்பு போலீசார் அவரை வெளியே கொண்டுவந்தனர்.

இந்த சம்பவத்தால் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மைதானத்திற்குள் சுரஜ் குதித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்