சென்னை:
தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் மேலும் 2 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக ஏற்கனவே 13 பேரை கைது செய்யப்பட்டனர். 100 போலி பாஸ்போர்ட்டுகளும் கைப்பற்றப்பட்டன. திருச்சியை சேர்ந்த கலைச்செல்வி மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் இருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஷாகுல் ஹமீத் மற்றும் சின்னையா என்ற அண்ணாச்சி ஆகியோரை கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட் வழக்கில் ஏற்கனவே கலையரசி என்பவர் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும்; தலைமறைவாக உள்ள மேலும் 12 பேர் கைது செய்யப்பட உள்ளதாக கியூ பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.