லூதியானா:
பஞ்சாப் மாநிலத்தில் போலி எடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாபில் ஏடிஎம் இயந்திரத்தல் பணம் எடுக்க வருபவர்களிடம், இந்த கும்பல் உதவி செய்வது போல் நடித்து, அவர்களின் ரகசிய நம்பரை கண்காணித்துள்ளனர்.
பின்னர், போலி எடிஎம் கார்டுகளை தயாரித்து, அவற்றை வைத்து பணம் எடுத்துள்ளனர். புகாரின் பேரில் பேரில் 5 பேர் கொண்ட கும்பலை பஞ்சாபின் லூதியானா போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த ஏராளமான போலி எடிஎம் கார்டுகள் கைபற்றப்பட்டுள்ளன.