சபரிமலை ஐயப்பனால்தான் கேரளாவில் கம்யூ., படுதோல்வி..!

சபரிமலை ஐயப்பனால்தான் கேரளாவில் கம்யூ., படுதோல்வி..!

சபரிமலை விவகாரத்தால் தான், பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படுதோல்வி அடைந்தது என்று அக்கட்சி தற்போது கண்டறிந்துள்ளது.

நடந்து முடிந்த, 2019 பாராளுமன்ற தேர்தலின் போது கேரளா மாநிலத்தில் 20 இடங்களில் ஒரு இடத்தில் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்றது. 19 இடங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

தேர்தல் தோல்வி பற்றி ஆராய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய கமிட்டியின் 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளாவது: சபரிமலை விவகாரத்தில் நம் கட்சி எடுத்த முடிவு தான் தேர்தலில் தோல்வியை அளித்துள்ளது.

நம் கட்சி ஆதரவு பெண்கள் சபரிமலைக்கு சென்றது தான் ஐயப்ப பக்தர்களின் மனம் புண்பட்டு அவர்களின் வெறுப்புக்கும், மக்களின் வெறுப்புக்கும் உள்ளானதே தோல்விக்கு முக்கிய காரணம். இவ்வாறு கமிட்டி தனது தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து முடிவு அளித்துள்ளதாக தெரிகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்