3 மாதம் சம்பள ஏமாற்றம்; ஊழியர்கள் போராட்டம்

3 மாதம் சம்பள ஏமாற்றம்; ஊழியர்கள் போராட்டம்

ஒசூர்:

சூளகிரி அருகே உள்ள தொழிற்சாலையில் 3 மாதம் சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக ஊழியர்கள் 300 பேர் போராட்டத்ததில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஸ்ரீ டெக்ஸ்டைல்ஸ் என்ற தனியார் கார்மென்ட்ஸ் உள்ளது. இதில் 1300 பேர் ஆண்கள் மற்றும் பெண்கள் வேலை செய்து வந்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென இந்த தொழிர்சாலை மூடப்பட்டது. இங்கு பணிபுரிந்து வந்த 1300 பேருக்கும் 3 மாத சம்பளத்தை 6 மாதம் கழித்து தருவதாக கூறியுள்ளனர். ஆனால் இதுவரை சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக சுமார் 300 பேர் அந்த தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன்ர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்