பேஸ்புக்கில் தவறான தகவல்..! மாணவி உட்பட 2 பேர் தற்கொலை..!

பேஸ்புக்கில் தவறான தகவல்..! மாணவி உட்பட 2 பேர் தற்கொலை..!

நெய்வேலி:

பேஸ்புக்கில் தங்களை பற்றி தவறான தகவலை பரப்பியதாக மாணவி உட்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி, குறவன் குப்பத்தை சேரந்த ராதிகா கடலூர் தனியார் கல்லூரி ஒன்றில், எம்.சி.ஏ 2ம் ஆண்டு படித்துவருகிறார். இவரைப்பற்றி அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தவறாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதன்காரணமாக இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த ராதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனை அறிந்த ராதிகாவின் உறவினர்களும், கிராமத்தினரும் பிரேம்குமார் வீட்டை அடித்து நொறுக்கினர். இருவரும் வெவ்வேறு சமூதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்த அவரது அத்தை மகன் விக்னேஷ், ராதிகா இறந்த செய்தி கேட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து, விக்னேஷின் தந்தையும், ராதிகாவின் தந்தையும் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் தனித்தனி புகாராக அளித்துள்ளனர். தலைமறைவான பிரேம்குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், ராதிகா மரணத்திற்கு நியாயம் கேட்டும் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

ராதிகா மற்றும் விக்னேஷ் உடல்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் குறவன்குப்பம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்