குடிநீர் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு!

குடிநீர் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கீடு!

சென்னை:

தமிழகம் முழுவதும் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்துக்குபின் முதல்வர் கூறுகையில், தமிழகம் முழுவதும குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஏற்கனவே ரூ.710 கோடி ஒதுக்கபட்டிருந்து. தற்போது கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சென்னை குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குவதாக தெரிவித்த கேரள அரசிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கேரள அரசு தினந்தோறும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தந்தால் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்