புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்து வரும் அக்டோபர் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருந்துவரும் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்ற காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில், வரும் அக்டோபர் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டுள்ளார்.