காலாவதியான தண்ணீர் கேன்கள்..! சென்னை வாசிகளே உஷார்..!!

காலாவதியான தண்ணீர் கேன்கள்..! சென்னை வாசிகளே உஷார்..!!

சென்னை:

சென்னையில் காலாவதியான 8 மினி வேன்களில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் கேன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை கோயம்பேடு, ரோகிணி தியேட்டர் அருகே இன்று அதிகாலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக 8 மினி வேன்களில் வந்த தண்ணீர் கேன்களை சோதனை செய்ததில், காலாவதியான 580 கேன்களை கைப்பற்றினர். அந்த கேன்களில் லேபிள்கள் மாற்றி ஒட்டப்பட்டிருந்தது.

மேலும், கோயம்பேடு, கொளத்தூர், வேளச்சேரி ஆகிய 3 இடங்களில் இந்த சோதனை தொடர்ந்தது.
இதனால், சென்னை வாசிகள் குடிநீருக்கா கேன்களை வாங்குவதை சரிபார்த்து வாங்க உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்