சென்னை:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பெ £துத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத்தெ £டர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வ குப்புகளை அந்தந்த பள்ளிகள் நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்களின் எதிர்ப்பால் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு அந்ததந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் என சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்த பொதுத்தேர்வுக்கு 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.100, 8ம் வகுப்பு ம £ணவர்களுக்கு ரூ.200ம் தேர்வு கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட் டுள்ளது.