அரியலூர்:
அரியலூர் திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவ சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
மறைந்த சிவசுப்பிரமணியனின் உடல் ஆண்டிமடத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவர் திமுகவின் சட்டதிருத்த குழு உறுப்பினராக பதவி வகித்தவர். அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரின் தந்தை ஆவார்.