சென்னை:
சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கிவிட்டு, ரயில் முன்பாய்ந்த சுரேந்தர் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 14ம் தேதி சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் ஈரோட்டை சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் அரிவாளால் வெட்டிவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுரேந்தர் இன்று உயிரிழந்தார்.