பிற மாநிலங்களில் 3வது பயிற்று மொழியாக தமிழ்..! மோடிக்கு முதல்வர் கோரிக்கை..!!

பிற மாநிலங்களில் 3வது பயிற்று மொழியாக தமிழ்..! மோடிக்கு முதல்வர் கோரிக்கை..!!

சென்னை:

நாட்டின் பிற மாநிலங்களில் 3வது மொழியாக தமிழை பயிற்றுவிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், பிற மாநிலங்களில் 3வது விருப்ப பாடமாக தமிழ் மொழியை சேர்க்க வேண்டும். உலகின் பழமையான மொழிக்கு செய்யும் இதுவே சிறந்த சேவையாகும் என பிரதமர் மோடிக்கு தன்னுடைய பதவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய புதிய கல்விக்கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சித்துவரும் நிலையில், பிற மாநிலங்களில் தமிழை 3வது பயிற்று மொழியாக்க முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்