அமெரிக்காவில் திருமணத்தில் கலந்துகொள்வோரிடம் நுழைவுக்கட்டணம் வசூலித்தது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் மணமகள் நுழைவுக்கட்டணமாக 50 டாலர்கள் (ரூ.3,500) வசூலிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து மணமகள் கூறுகையில், நுழைவுக்கட்டணம் செலுத்துவோர் சிறப்பு சலுகையாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவசியமில்லை எனவும், அவர் பிரத்யேக விருந்தினராக உபசரிக்கப்படுவார என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நுழைவுக்கட்டண பணத்தை திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைய அடைப்பதற்காக வசூலிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆ ச்சர்ய சம்பவம் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.