சவுத்தாம்டன்:
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 19 வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, வெஸ்ட்இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயில் மற்றும் லெவிஸ் களமிறங்கினர்.
லெவிஸ் 2, கெயில் 36, ஹோப் 11, ஹெட்மயர் 39, ஹோல்டர் 9, ரசல் 21, பூரன் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். காட்ரெல், பிராத்வெயிட் மற்றும் கேப்ரியல் ஆகியோர் ரன் எடுக்கமாலேயே அவுட்டாகி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 44.4 ஓவர்களில் 212 ரன்களை வெஸ்ட்இண்டீஸ் அணி எடுத்திருந்தது.
213 ரன்கள் இலக்காக களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்க ஆட்டக்காரர்களாக பயர்ஸ்டோ மற்றும் ஜோய் ரூட் விளையாடினர்.
இதில், பயர்ஸ்டோ 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேபிரியல் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். இவரைத்தொடர்ந்து ஆட ஆரம்பித்த வோக்ஸ் 40 ரன்களில் கேபிரியல் பந்துவீச்சில் கேட்ச் ஆகி அவுட்டானார். பின்னர் ஸ்டோக்ஸ் 10 ரன்களிலும் ஜோய் ரூட் 100 ரன்களுடன் ஆட்டத்தை முடிவுக்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணி 33.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை எடுத்து வெற்றியை தேடித்தந்தனர்.
இங்கிலாந்து அணியின் வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளை பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளது. வெஸ்ட்இண்டீஸ் 3 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்தின் இந்த வெற்றியால் 3ம் இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 4ம் இடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.