பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்..!

பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்..!

சென்னை:

பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி துவங்க இருந்தநிலையில், தற்போது 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகளில் சேர, ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டனர். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருவதால், இன்று வெளியாக இருந்த தரவரிசை பட்டியல் வரும் 20ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 20ம் தேதி நடக்கவிருந்து கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிக்கான கலந்தாய்வு 25ம் தேதியும், முன்னாள் ராணுவத்தினருக்கு 26ம் தேதியும், விளையாட்டு பிரிவுக்கு 27ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்