அனந்த்நாக்:
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நடந்த தீவிரவாதிகளுடனான சண்டையில் ஒரு ராணுவ வீரர் பலியானார்.
ஜம்மு காஷமீர் மாநிலம், அனந்த்நாக் நகரில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். இதனையடுத்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் பலியானார்.
இந்த சண்டையில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் பதுக்கிவைக்க உதவிய கடைகளை பறிமுதல் செய்துள்ளனர்.