மதுரை:
மதுரையில் தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரையில் மாபெரும் தனியார் வேலைவ £ய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (1.02.2020 அன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. மதுரை திருமங்கலத்தில் உள்ள பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில், 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்த முகாமில் மதுரை ம £வட்டத்திலுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம் எனவும், அனுமதி இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.